யோகாசனம்

யோகக் கலை.... சின்ன வயசிலிருந்தே நாம் கேட்ட இந்த வார்த்தையை கண்டுக்காம, இப்போ ஏதாவது உடல் பிரச்சினை வந்த பிறகு ஆசனப் பயிற்சிக்காக எங்கெங்கோ அலைய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சரி காலம் கடந்த ஞானம் என்றாலும் தெரிஞ்சுக்கோங்க!
                 இன்று உலக மக்கள் குறிப்பாக அந்நிய நாட்டு மக்கள் இந்தக் கலையை மிகவும் விரும்பிச் செய்கின்றனர்.ஒரு காலத்தில் முனிவர்களுக்கு மட்டும் சொந்தமாக இருந்த கலை இரன்று பட்டி தொட்டியெல்லாம் பரவலாக பலராலும் பின்பற்றி வருவது நல்ல விஷயம்.இந்தக் கலையை நாடி வருபவருக்குக் கண்டிப்பாக ஏதோ ஒரு விஷயம் அவருக்கு நிம்மதியையும், நிவாரணத்தையும் கொடுக்கிறது.யோகாசனம் யாருக்கு யோகம் இருக்கோ அவர்தான் ஆசனம் செய்ய முற்படுவர். ஆசனம் செய்ய எந்த நிபந்தனையுமில்லை ஒல்லியான,குண்டான,வயதான,இளமையான,நம்பிக்கையுடைய , நம்பிக்கையற்ற யாருக்கும் இது கண்டிப்பாக நற்பலனைத் தரும் என்பது என் நம்பிக்கை. உண்மை.
இந்த பதிவில் எனக்குத் தெரிந்த ஆசனங்களை முறையாக எழுத ஆரம்பிக்கிறேன். குறைகளிருப்பின் அறிவுறுத்த வேண்டுகிறேன்.பிழைகளை திருத்திக் கொள்கிறேன்.



யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் கவனிக்க......

காலை வேளை ஆசனங்கள் செய்ய ஏற்றதாகும். வானிலை நன்றாக குளிர்ச்சியாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரியன் உதிக்கும் முன் ஆசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காலை வேளைகளில் ஆசனங்களை செய்யமுடியாவிட்டால், மாலை நேரம் செய்யலாம்.
செய்யும் இடம் சுத்தமாக காற்றோட்டமான இடையூறு ஏற்படாத இடமாக இருக்க வேண்டும். வெறுந்தரையில் செய்ய கூடாது. ஒரு விரிப்பை தரையில் விரித்து அதன் மேல் ஆசனங்களை செய்யவும். வயிறு காலியாக இருக்க வேண்டும். உணவு உண்ட பின் 3 – 4 மணி நேரம் கழித்தே ஆசனம் செய்ய வேண்டும்.
எனவே காலை நேரம் செய்தால் நல்லது. மலஜலம் கழித்த பின் ஆரம்பிக்க வேண்டும். யோகாசனங்களுக்கு 15 நிமிடம் முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கவும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். முடிந்தால் குளித்து விட்டு தொடங்கவும். தொளதொளவென்று இருக்கும் ஆடைகளை அணியவும்.
உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், பெண்கள் மாதவிடாய் காலங்களிலிருந்தாலும் ஆசனங்கள் செய்ய வேண்டாம். வெறும் தலைவலி இருந்தால் கூட ஆசனங்கள் செய்ய வேண்டாம். ஆசனங்கள் செய்யும் போது முதலில் எளிய பயிற்சிகளுடன் தொடங்கவும். உடலின் இறுக்கம் குறைய வாம் அப் எனப்படும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.
உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஹெர்னியா, ஸியாடிகா இருந்தால் நல்ல யோக நிபுணர் / வைத்தியர் அறிவுரைகளின் பேரில் ஆசனங்களை செய்ய தொடங்க வேண்டும். உடலை வருத்திக் கொண்டு பிடிவாதமாக ஆசனங்களை செய்யாதீர்கள். உங்கள் வயது, உங்கள் உடலின் சக்திக்கேற்ப செய்யுங்கள்.
யோகாசனங்களை செய்யும் போது, எப்போது மூச்சை அடக்குவது, எப்போது மூச்சை விடுவது என்பது மிக மிக முக்கியம். இதை தெரிந்து கொள்வது மிக அவசியம். எவ்வளவு நேரம் ஆசனங்கள் செய்ய வேண்டுமென்பது அவரவர் தேவைகளை பொருத்தது. சராசரியாக 1 மணி நேரம் செய்வது போதுமானது. ஒவ்வொருவருக்கும் வரும் சந்தேகம் இது.
எந்த ஆசனத்தை எவ்வளவு நிமிடம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்- என்பன. யோகாவின் போது அவ்வாறு எந்தக் கணக்கும் இல்லை ஒவ்வொரு நிலையிலும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது. சாதாரணமாக சூரிய நமஸ்காரத்தில் ஆரம்பித்து. யோகசனங்களும், பிராணாயாமமும் தொடரும். சவாஸனத்தில் முடிவடையும்.

Popular posts from this blog

அக்குப்பங்சர் எளிய தமிழில் பயில

Tizum Travel Portable Hard Case Pouch for Echo Dot (Grey)

IntelliMate AI Commercial